
செய்திகள் மலேசியா
மக்கள் அனைவரின் பொறுமையால் தான் நாடு மீள முடியும்; இது ஓர் அறப்போர்; தியாகங்களைச் செய்வதே தற்போதைய தேவை: இஸ்மாயில் சப்ரி உருக்கமான வேண்டுகோள்
கோலாலம்பூர்:
MCO:3 முழு அளவிலான முடக்க நிலையின்போது மாவட்டங்கள், மாநிலங்கள் இடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த ஊரடங்கு நடவடிக்கை வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் சற்று பொறுமை காக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
"ஒவ்வொரு தனி நபரும் பல தியாகங்களைச் செய்வதே தற்போதைய சூழ்நிலையில் அவசியமாகிறது. சிலர் தங்கள் வியாபாரத்தை தற்காலிகமாக நிறுத்தவேண்டி இருக்கும். சிலர் இரு வாரங்களுக்குத் தங்களது தொழிற்சாலைகளை மூடவேண்டி இருக்கும்.
"இருவேறு தூரப் பகுதிகளில் வசித்து வரும் திருமணமான தம்பதியர் மாவட்டம் அல்லது மாநிலங்களைக் கடந்து செல்ல அனுமதி கிடையாது. அவர்களும் அடுத்த இரு வாரங்களுக்கு பொறுமை காக்க வேண்டும்," என்று இன்றைய செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகூப் கேட்டுக் கொண்டார்.
மக்கள் அனைவரின் பொறுமையால் தான் நாடு மீள முடியும்; இது ஓர் அறப்போர்; தியாகங்களைச் செய்வதே தற்போதைய தேவை.
இதேவேளையில் இறப்பு நிகழ்வு அல்லது ஆபத்தான உடல்நிலையில் உள்ள குடும்ப உறுப்பினர்களைச் சந்திப்பது ஆகியவற்றுக்கு அரச மலேசிய போலீஸ் படையின் அனுமதியுடன் பயணங்களை மேற்கொள்ள இயலும் என அவர் தெளிவுபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm