
செய்திகள் மலேசியா
அனைத்து அமைச்சர்களும், துணை அமைச்சர்களும் தங்கள் மூன்று மாத ஊதியத்தை கோவிட் -19 தொற்று நடவடிக்கைகளுக்கு பேரிடர் கால நிதியாக வழங்குவார்கள்: பிரதமர் அறிவிப்பு
கோலாலம்பூர்:
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் ஜூன் முதல் மூன்று மாதங்களுக்கு தங்களது சம்பளத்தை வழங்குவார்கள் என்று பிரதமர் டான்ஸ்ரீ முஹைதீன் யாசின் இன்று மாலை அறிவித்தார்.
அதற்கு பதிலாக, அவர்களின் சம்பளம் நாளை தொடங்கும் "ஊரடங்கின் - நடமாட்டுக் கட்டுப்பாட்டு" விளைவுகளைத் தணிக்கும் நோக்கில் RM40 பில்லியன் பெமர்காசா பிளஸ் உதவி முயற்சிக்கு மாற்றப்படும் என்றார்.
"2021 ஜூன் முதல் மூன்று மாதங்களுக்கு தங்கள் சம்பளத்தை விட்டுக்கொடுப்பதின் மூலம் அனைத்து அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் கொரோனாவை ஒழிப்பதில் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு தங்களது ஆதரவை வழங்கி உள்ளார்கள் என்பதை நான் தெரிவிக்க விரும்புகிறேன்" என்று பிரதமர் முஹைதீன் யாசின் தொலைக்காட்சியில் இன்று வழங்கிய சிறப்பு உரையில் கூறினார்.
"அமைச்சர்களின் ஊதியம் முழுவதும் கோவிட் -19 தொற்று தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த நிதி "பேரிடர்கால அறக்கட்டளை" கணக்கில் செலுத்தப்படும்," என்று பிரதமர் கூறினார்.
தற்போது அரசாங்கத்தின் நிதியாற்றல் பெரிய அளவில் இல்லை என்றாலும்கூட குடிமக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படக்கூடாது என அரசு விரும்புவதாக அவர் குறிப்பிட்டார். எனவே, அரசாங்கம் தொடர்ந்து முடிந்தவரை மக்களுக்கு உதவி செய்யும் என்றார் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதீன் யாசின்.
கடந்த ஆண்டும்கூட கொரோனா நிதிக்காக அமைச்சர்களும் துணை அமைச்சர்களும் தங்களது 2 மாத ஊதியத்தை வழங்கி இருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm