செய்திகள் மலேசியா
கலைஞர், கல்வியாளர், தொழில்முனைவோர் என்று பல பரிணாமம் கொண்ட லிம் கோக் விங் காலமானார்
பெட்டாலிங் ஜெயா:
கலைஞர், தொழில்முனைவோர், கல்வியாளர் என்று ஆளுமை மிக்க லிம் கோக் விங் இன்றுதனது 75ஆம் வயதில் காலமானார்.
லிம்மின் உதவியாளர் இன்று இதை உறுதிப்படுத்தினார், ஆனால் கூடுதல் விவரங்களை வழங்க மறுத்துவிட்டார்.
கடந்த வாரம், லிம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.
லிம் ஒரு வரைகலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், மலேசியா மற்றும் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பல காமிக் தொடர்களின் பிதாமகனாக அவர் இருந்தார்.
விளம்பரத்துறையிலும் அவர் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி செம்மையாக செயல்பட்டார். விளம்பரத்துறையில் சொந்த நிறுவனமான விங்ஸ் கிரியேட்டிவ் கன்சல்டன்ட்ஸ் 1975 ஆம் ஆண்டு தொழில்முறை மலேசிய நிறுவனமாகத் தொடங்கினார்.
மூன்று ஆண்டுகளுக்குள், இந்நிறுவனம் நாட்டின் தலைசிறந்த ஏஜென்சிகளில் ஒன்றாக மாறியது, 1988 ஆம் ஆண்டில், இது உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான உலகளாவிய நிறுவனங்களான பிபிடிஓவுடன் கூட்டுசேர்ந்தது.
1991 ஆம் ஆண்டில், லிம் கல்விதுறையின் மீது தனது கவனத்தைத் திருப்பினார், லிம்கோக்விங் இன்ஸ்டிடியூட் ஆப் கிரியேட்டிவ் டெக்னாலஜி நிறுவப்பட்டது, இது 2002 ஆம் ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரியாக அங்கீகரிக்கப்பட்ட முதல் தனியார் கல்லூரியாகும். பின்னர் இது லிம்கோக்விங் யுனிவர்சிட்டி ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலஜி என மறுபெயரிடப்பட்டது.
இன்று அவரது பல்கலைக்கழகம் உலகளாவிய அங்கீகாரத்தை அடைந்துள்ளது, லிம்கோக்விங் பெயர் உலகின் பிற பகுதிகளுக்கு அதன் சிறகுகளை பரப்பியது.
சைபர்ஜயாவில் அதன் முதன்மை வளாகம் தோன்றி அதன் கிளைகளை அது சரவாக், கம்போடியா, போட்ஸ்வானா, சியரா லியோன் மற்றும் இங்கிலாந்து ஆகிய இடங்களுக்கும் பரப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது,
ஒரு சிறந்த படைப்பாளியை மலேசியா இழந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
