
செய்திகள் மலேசியா
தென்னாப்பிரிக்க உருமாறிய கொரோனா: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
கோலாலம்பூர்:
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை மலேசியாவிலும் பரவியுள்ள நிலையில், மக்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தென்னாப்பிரிக்க கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இந்த உருமாறிய கொரோனா வகை சமூக அளவில் அதிகம் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், B.1.351 என்று குறிப்பிடப்படும் கொரோனா திரிபு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றார்.
இத்தகைய கொரோனா திரிபுகள் தொடர்பான சூழ்நிலையை ஒவ்வொரு தனிநபரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் ஏற்கெனவே இந்திய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் வியட்நாமில் காற்றில் பரவக்கூடிய தன்மை கொண்ட உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வகைத் திரிபு மலேசியாவுக்குள் இன்னும் ஊடுருவவில்லை என டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா திரிபுகள் மலேசியாவில் பரவாமல் இருக்க நாட்டின் எல்லைப் பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் அண்மையில் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am
அனைத்து தந்தையர்களுக்கும் பேரரசர் தம்பதியர் தந்தையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனர்
June 15, 2025, 10:35 am
உணவகங்களில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கான அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும்: பிரிமாஸ்
June 15, 2025, 10:31 am