செய்திகள் மலேசியா
தென்னாப்பிரிக்க உருமாறிய கொரோனா: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
கோலாலம்பூர்:
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகை மலேசியாவிலும் பரவியுள்ள நிலையில், மக்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தென்னாப்பிரிக்க கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
இந்த உருமாறிய கொரோனா வகை சமூக அளவில் அதிகம் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ள அவர், B.1.351 என்று குறிப்பிடப்படும் கொரோனா திரிபு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என்றார்.
இத்தகைய கொரோனா திரிபுகள் தொடர்பான சூழ்நிலையை ஒவ்வொரு தனிநபரும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலேசியாவில் ஏற்கெனவே இந்திய கொரோனா திரிபு கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளையில் வியட்நாமில் காற்றில் பரவக்கூடிய தன்மை கொண்ட உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வகைத் திரிபு மலேசியாவுக்குள் இன்னும் ஊடுருவவில்லை என டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா திரிபுகள் மலேசியாவில் பரவாமல் இருக்க நாட்டின் எல்லைப் பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவர் அண்மையில் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
