செய்திகள் மலேசியா
இரு தினங்களில் அபராதங்கள் மூலம் 210,500 ரிங்கிட் வசூலிப்பு: இது ஜோகூர் நிலவரம்
ஜோகூர்:
முழு அளவிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை MCO 3.0 அமல்படுத்தப்பட்ட முதல் 2 நாளில் ஜோகூர் காவல்துறை 210,500 மலேசிய ரிங்கிட் மதிப்பிலான அபராதங்களை விதித்துள்ளது.
மொத்தம் 82 அபராத விதிப்புகள் மூலம் இத்தொகை திரண்டுள்ளதாக ஜோகூர் காவல்துறை தலைவர் அய்யூப் கான் மைதின் பிச்சை தெரிவித்துள்ளார்.
முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டது முதல் இதுவரை மொத்தம் 4,423 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோகூர் பாரு செலாதான், இஸ்கந்தர் புத்ரி, செகாமட் ஆகிய மாவட்டங்களில்தான் அதிகமானோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதது, ஒரே காரில் அதிகமானோர் பயணம் மேற்கொண்டது, கட்டட வளாகங்களில் நுழையும்போது அங்குள்ள பதிவேடுகளில் தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்யாதது, வெப்பநிலையை குறிப்பிடாதது ஆகிய குற்றங்களுக்காக அபராதங்கள் விதிக்கப்பட்டது என அய்யூப் கான் தெரிவித்துள்ளார்.
MCO 3.0வின் முதல் இரண்டு நாட்களில் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள 3,383 விண்ணப்பங்கள் காவல்துறைக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அவற்றும் 82 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 3,296 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், உரிய காரணங்கள், ஆவணங்கள் இன்றி பயணம் மேற்கொள்ள முயன்ற 235 வாகனங்கள் சாலைத் தடுப்புகளில் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
