செய்திகள் மலேசியா
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்: மாமன்னருக்கு மகாதீர் கோரிக்கை
கோலாலம்பூர்:
மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க மாமன்னர் தலையிட வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மொஹம்மத் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தாம் மாமன்னருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த மே 31ஆம் தேதி தாம் அனுப்பிய கடிதத்துக்கு இன்னும் பதில் வரவில்லை என இன்று இணையம் வழி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மகாதீர் குறிப்பிட்டார்.
"மாமன்னர்தான் மக்களின் பாதுகாவலர் என்றும் மக்களைக் காக்கும் குடை என்றும் நம்புகிறோம். எனவே அரசாங்கத்திடம் தாங்கள் எதிர்பார்த்தது கிடைக்காத போது வருத்தம் அடையும் மக்கள், தங்கள் பிரச்சினைகளை தீரப்பதற்காக மாமன்னரை எதிர்நோக்குவர்.
"மாமன்னர், அரசாங்கம் அல்லாமல் வேறு யாரிடம் மக்களால் உதவி கேட்க முடியும்?" என்று மகாதீர் குறிப்பிட்டார்.
தற்போது நடைபெறும் மோசமான ஆட்சி நாட்டைத் தொடர்ந்து வழிநடத்த மக்கள் அனுமதிக்க வேண்டுமா? எனும் கேள்வியையும் மகாதீர் முன்வைத்தார்.
"எனவேதான் மாமன்னருக்கு கடிதம் வழி கோரிக்கை விடுத்துள்ளோம். மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளோம்," என்றார் மகாதீர்.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்திருப்பது மற்றும் அவசர நிலை பிரகடனம் ஆகியவற்றை மகாதீர் சுட்டிக்காட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
