செய்திகள் மலேசியா
ICUவில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: நூர் ஹிஷாம்
கோலாலம்பூர்:
கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழக்கக் கூடிய ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இந்தாண்டு வெகுவாக அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே போல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அதே வயது வரம்பிலான குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பதாக அந்த அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் கூறியுள்ளார்.
"குழந்தைகளின் இறப்பு மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து நிறைய கேள்விகளை எதிர்கொண்டுள்ளோம்.
"கடந்த ஆண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மூன்று பேர் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தனர். ஆனால் இந்த ஆண்டு மே வரையிலான முதல் ஐந்து மாதங்களிலேயே அதே அளவிலான மரணச்சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
"மேலும், கடந்த ஆண்டு எட்டு குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். ஆனால் இந்த ஆண்டு இதுவரை 27 குழந்தைகள் அப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 19 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வகுத்துள்ள அனைத்து SOPக்களையும் முறையாகப் பின்பற்றி குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்கித் தர வேண்டியது பெற்றோரின் கடமை என்று குறிப்பிட்டுள்ள அவர், வீட்டில் உள்ள பெரியவர்கள் இயன்ற விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்வதும் அவசியம் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
