செய்திகள் மலேசியா
446 சட்டத்தை மீறினால் நடவடிக்கை பாயும்: டத்தோஸ்ரீ சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
உரிய வசதிகள் இல்லாத இடங்களில் தொழிலாளர்களை தங்கவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
மனிதவளத் துறையின் அனுமதி இன்றி வசதியற்ற இடங்களில் தொழிலாளர்களை தங்க வைத்தால் நடவடிக்கை பாயும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய விதிமீறல் தொடர்பாக பல தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி உள்ள அமைச்சர், அந்நியத் தொழிலாளர்கள் சுகாதாரமான இடங்களில் தங்குவதற்கு தொழில் நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதற்கேற்ப செயல்படாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
446 சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் MCO எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்றும் மனிதவள அமைச்சு கண்காணித்து வருகிறது.
இந் நிலையில் நீலாய் பகுதியில் உள்ள நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர் அதன் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந் நிறுவனத்தில் சுமார் 169 அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 264 என்றும் தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் மனிதவளத்துறை, சுகாதார - பாதுகாப்புத்துறை, காவல்துறை ஆகியவை இணைந்து அந்நிறுவனத்தின் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்நிறுவனம் விதிமுறைகளை மீறியது தெரிய வந்துள்ளது.
446 ஆவது சட்டத்தை மீறிய தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் 352,000 ரிங்கிட் அபராதம் வசூலிக்கக்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
