செய்திகள் மலேசியா
446 சட்டத்தை மீறினால் நடவடிக்கை பாயும்: டத்தோஸ்ரீ சரவணன் எச்சரிக்கை
கோலாலம்பூர்:
உரிய வசதிகள் இல்லாத இடங்களில் தொழிலாளர்களை தங்கவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்துள்ளார்.
மனிதவளத் துறையின் அனுமதி இன்றி வசதியற்ற இடங்களில் தொழிலாளர்களை தங்க வைத்தால் நடவடிக்கை பாயும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய விதிமீறல் தொடர்பாக பல தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டி உள்ள அமைச்சர், அந்நியத் தொழிலாளர்கள் சுகாதாரமான இடங்களில் தங்குவதற்கு தொழில் நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதற்கேற்ப செயல்படாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
446 சட்டம் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதையும் MCO எனப்படும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்றும் மனிதவள அமைச்சு கண்காணித்து வருகிறது.
இந் நிலையில் நீலாய் பகுதியில் உள்ள நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப் பின்னர் அதன் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அந் நிறுவனத்தில் சுமார் 169 அந்நியத் தொழிலாளர்கள் பணியாற்றி வருவதாகவும், மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 264 என்றும் தெரிய வந்துள்ளது.
இந் நிலையில் மனிதவளத்துறை, சுகாதார - பாதுகாப்புத்துறை, காவல்துறை ஆகியவை இணைந்து அந்நிறுவனத்தின் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்நிறுவனம் விதிமுறைகளை மீறியது தெரிய வந்துள்ளது.
446 ஆவது சட்டத்தை மீறிய தொழில் நிர்வாகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் 352,000 ரிங்கிட் அபராதம் வசூலிக்கக்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
