செய்திகள் மலேசியா
ஷாஃபி அப்தால், சையத் சாதிக்குடன் இணையத் தயார்: அன்வாரை ஒதுக்கிய மகாதீர்
கோலாலம்பூர்:
பெஜுவாங் கட்சிக்கு மலேசிய சங்கப் பதிவு இலாகாவின் அங்கீகாரம் இன்னும் கிடைக்கப் பெறவில்லை என துன் மகாதீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் அக்கட்சி தொடர்ந்து தனித்து இயங்கிவரும் என்று அவர் கூறினார்.
பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பெஜுவாங் கட்சியை நிறுவியுள்ளார் துன் மகாதீர்.
இதையடுத்து தனது கட்சிக்கு அங்கீகாரம் அளிக்கக் கோரி சங்கப் பதிவு இலாகாவில் அவர் விண்ணப்பித்துள்ளார்.
இந் நிலையில் அடுத்த பொதுத் தேர்த்தில் மீண்டும் நம்பிக்கை கூட்டணியில் பெஜுவாங் கட்சி இணையுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
ஆனால், அவ்வாறு இணைந்து செயல்படுவதில் தமக்கு ஆர்வம் இல்லை எனக் கூறியுள்ளார் மகாதீர்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தலைமை ஏற்றுள்ள நிலையில் அவரைப்பற்றி அண்மைய சில மாதங்களில் பலமுறை கருத்துகளைத் தெரிவித்துள்ளார் மகாதீர்.
இதனால், இருதரப்புக்கும் இடையே அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் 15வது பொதுத் தேர்தல் வரை பெஜுவாங் தனித்து இயங்கும் என்றும் சங்கப் பதிவு இலாகாவின் அங்கீகாரத்துக்காக காத்திருக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை தங்களது எதிர்பார்ப்பின்படி சங்கப் பதிவு இலாகாவின் கிடைக்காமல் போகும் பட்சத்தில் பாரிசான் கட்சியுடனும் அதன் தலைவர் ஷாஃபி அப்தாலுடனும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதாக மகாதீர் கோடி காட்டினார்.
வாய்ப்பிருப்பின் சையத் சாதிக் தலைமையிலான மூடாக் கட்சியுடனும் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக துன் மகாதீர் மேலும் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
