
செய்திகள் மலேசியா
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித்தொற்றுக்கு 109 பேர் பலி
கோலாலம்பூர்:
மலேசியாவில் ஒரேநாளில் கொரோனா கிருமித் தொற்றுக்கு 109 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை பலியானவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,291ஆக அதிகரித்துள்ளது. இத் தகவலை மலேசிய சுகாதார அமைச்சு இன்றுடுவிட்டர் வழி தெரிவித்துள்ளது.
அண்மைய சில தினங்களாக நாட்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்றுவரை 883 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3 நோயாளிகள் அப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.