செய்திகள் மலேசியா
தினமும் 12 ஆயிரம் பயண விண்ணப்பங்களுக்கு அனுமதி: உள்துறை அமைச்சு
புத்ராஜெயா:
MCO 3.0 அமலில் இருக்கும் இவ்வேளையில் மாவட்டங்கள், மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள தினம்தோறும் 12 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 1ஆம் தேதி முழு முடக்கநிலை அறிவிக்கப்பட்டது முதல் இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சிர் டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதின் தெரிவித்துள்ளார்.
இறப்பு, அவசரநிலை, சுய தொழில் செய்வோரிடமிருந்து தான் அதிக விண்ணப்பங்கள் வருவதாக அமைச்சர் சுட்டிக் காட்டினார். மேலும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பயணம் மேற்கொள்ள, பலர் பயன்படுத்தி வந்த 118 உள்வழிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முழு முடக்க நிலை அறிவிக்கப்பட்டபோது நாள்தோறும் 1.3 மில்லியன் வாகனங்களை சாலையில் காணமுடிந்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்த எண்ணிக்கை 5 லட்சமாக குறைந்துள்ளது என்றார்.
MCO 3.0 காலகட்டத்தில் காவல்துறையும் சம்பந்தப்பட்ட முகமைகளும் இணைந்து நாடு முழுவதும் 85 ஆயிரம் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன்வழி 35 ஆயிரம் கட்டடங்களில் சோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பேரங்காடிகள் , உணவகங்கள், தொழிற்சாலை உள்ளிட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட டத்தோஸ்ரீ ஹம்ஸா ஸைனுதின் SOPகளை மீறியதாக இதுவரை 3,514 பேருக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 163 பேர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
