செய்திகள் மலேசியா
மேலும் ஒரு தடுப்பூசியைப் பரிசோதிக்க தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி
கோலாலம்பூர்:
நாட்டில் மேலும் ஒரு தடுப்பூசியைப் பரிசோதிக்க தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
Sars-Cov-2 என்ற அந்த சீனத் தயாரிப்புத் தடுப்பூசிக்கு மே 28ஆம் தேதி இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் உள்ள 8 ஆய்வு மையங்களில் இந்தப் புதிய தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை (clinical study) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட மொத்தம் மூவாயிரம் பேரிடம் இப்புதிய தடுப்பூசி பரிசோதிக்கப்படும் என்றும் அதற்கு 15 முதல் 19 மாதங்கள் வரை ஆகக்கூடும் என்றும் டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் கூறினார்.
மலேசியா மட்டுமல்லாமல் கொலம்பியா, அர்ஜென்டினா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், உக்ரைன் ஆகிய நாடுகளும் இப்பரிசோதனையில் ஈடுபட்டுள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.
அவசரகால பயன்பாட்டுக்கென இந்தத் தடுப்பூசிக்கு சீன அரசாங்கம் கடந்த மே 14ஆம் தேதி அனுமதி அளித்திருப்பதாக தெரிய வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
August 24, 2026, 3:07 pm
LRT இரயிலில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: 43 வயது வெளிநாட்டவர் கைது
August 24, 2026, 3:06 pm
பண்டமாரானில் உள்ள உணவகத்தில் ஆயுதங்களுடன் ரகளை: 5 பேர் கைது
August 24, 2026, 12:55 pm
சுபாங் ஜெயா கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம்
August 24, 2026, 11:45 am
இரும்பு கம்பியால் அண்டை வீட்டுக்காரரைத் தாக்கிய நபர்: 7 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பு
August 24, 2026, 11:26 am
ஜொகூர் லிங்கெடுவா நெடுஞ்சாலையில் சட்டவிரோத மோட்டார் பந்தய விவகாரம்: 8 பேர் கைது
August 24, 2026, 10:55 am
செந்தூல் கம்போங் காசிப்பிள்ளையில் அதிகாலையில் தீ விபத்து: ஓர் ஆடவர் பாதிக்கப்பட்டார்
August 24, 2026, 10:27 am
நாட்டிலுள்ள நான்கு மாநிலங்களில் காற்றின் தர குறியீடு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு
August 23, 2026, 9:23 pm
