
செய்திகள் மலேசியா
சபாவில் டெல்டா கொரோனா வகை பரவியதா? : வெறும் வதந்தி என்கிறது மாநில அரசு
கூச்சிங்:
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா திரிபு சபாவில் பரவி இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது எனத் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் அதிகம் பரவிய இந்தத் தகவல் பொய்யானது என்று சபா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் கிறிஸ்டினா ருன்டி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என பெயர் வைத்துள்ளது. இந்நிலையில் சபா மாநில தலைநகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள தாமான் வங்சா என்ற இடத்தில் டெல்டா திரிபு காணப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. தற்போது அந்தப் பகுதியில் மேம்படுத்தப்பட்ட MCO அமலில் உள்ளது.
மலேசியாவில் டெல்டா திரிபு பாதிப்பு இருப்பது ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. எனினும் சபாவையும் இந்தத் திரிபையும் தொடர்புபடுத்தி இப்போது வெளியாகி உள்ள தகவலை நம்பவேண்டாம் என டாக்டர் கிறிஸ்டினா ருன்டி கேட்டுக் கொண்டார். அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ள மே 26ஆம் தேதி முதல் சபா மாநில அரசு தடை விதித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 11:15 pm
13ஆவது மலேசியத் திட்டத்தை பிரதமர் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார்
July 30, 2025, 10:27 pm
மித்ராவுக்கு தெரிவிக்காமல் 16 திட்டங்களுக்கு பிரதமர் இலாகா நிதி ஒப்புதல் அளித்துள்ளது?
July 30, 2025, 10:22 pm
காதலனின் தாயைக் கொலை செய்ததாக பெண் ஒருவர் மீது குற்றச்சாட்டு
July 30, 2025, 10:19 pm
துன் மகாதீரின் பிள்ளைகள் செல்வத்தின் மூலாதாரம் குறித்து விளக்க வேண்டும்: பிரதமர்
July 30, 2025, 4:03 pm
தேவக்ஷேனின் இறுதிச் சடங்கு சோகமான சூழலில் நடைபெற்றது
July 30, 2025, 4:01 pm