செய்திகள் மலேசியா
இறப்புகளற்ற இங்கிலாந்து போல் மலேசியாவும் வர வேண்டும்; தடுப்பூசி போடுவதில் இங்கிலாந்து நமக்கு தூண்டுகோல்: டாக்டர் ஆதாம் பாபா
ஜோகூர்பாரு:
கோவிட் -19 தொற்றின் இறப்புகளில் இருந்து மலேசியா முற்றிலும் நீங்க வேண்டும் என்பதே நம் நோக்கம். இங்கிலாந்து (யுகே) தொற்றிலிருந்து நீங்கி வெற்றி அடைந்துள்ளது. அந்த நாட்டின் மீட்சியும் தேசிய கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் செயல்திறனும் மலேசிய அரசாங்கத்திற்கு நம்பிக்கையை அளித்துள்ளது என்று கூறி இருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆதாம் பாபா.
அவர் மேலும் கூறுகையில், "இங்கிலாந்தின் வெற்றி மலேசிய அரசாங்கத்தை வைரஸுக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்கான தடுப்பூசி முயற்சிகளைத் தொடரவும் மேம்படுத்தவும் தூண்டியுள்ளது. இறப்புகளற்ற இங்கிலாந்து போல் மலேசியாவும் வர வேண்டும்.
"பெறப்பட்ட தரவுகளைப்பார்க்கும் போது இங்கிலாந்து தனது தடுப்பூசி திட்டத்தை முழுமையாக அமல்படுத்தியதால் தொற்றினால் மரணங்கள் இல்லை என்பதை பதிவு செய்திருக்கிறது.
"கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு முதன்முறையாக கோவிட் -19 இலிருந்து இங்கிலாந்து பூஜ்ஜிய இறப்புகளைப் பதிவு செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன; இதனால் கடந்த டிசம்பரிலிருந்து செயல்படுத்தப்பட்ட அதன் தடுப்பூசி திட்டத்தின் செயல்திறனை நிரூபிக்கிறது.
தடுப்பூசி பயிற்சியின் ஒரு கட்டமாக, சுமார் 500,000 முன்னணி வீரர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 9.3 மில்லியன் பேர் தடுப்பூசியை இரண்டாம் கட்டத்தில் பெறுவார்கள் என்றும், மூன்றாம் கட்டத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்றும் டாக்டர் ஆதாம் கூறினார்.
"மெகா PPV, மொபைல் PPV, ஹெல்த் கிளினிக் PPV, பொது மருத்துவமனை PPV, மற்றும் பலவற்றை உள்ளடக்கிய நாடு முழுவதும் அதிகமான PPV வழங்குவதற்கான முயற்சியை அரசாங்கம் எடுத்து வருகிறது.
தடுப்பூசி பதிவு செய்யத் தவறியவர்களுக்கு மைசெஜ்தெரா விண்ணப்பத்தின் மூலம் அதை மீண்டும் செய்யலாம் என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார். "மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை பெற இது முக்கியம், எனவே, கோவிட் -19 சங்கிலியை உடைக்க இதுதான் உகந்த வழி," என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
