
செய்திகள் மலேசியா
பறந்தபடி உடல் வெப்ப நிலையை பரிசோதிக்கும் ட்ரோன்கள் (DRONE)
கோல திரங்கானு:
முழு முடக்க நிலையின்போது வீட்டிற்கு வெளியே நடமாடுபவர்களின் உடல் வெப்பநிலையைப் பரிசோதிக்க காவல்துறையினர் ட்ரோன்களைப் (DRONE) பயன்படுத்துவதாக திரங்கானு மாநில காவல்துறை தலைவர் ரொஹைமி முஹம்மத் ஈசா (Rohaimi Mohammad Isa) தெரிவித்துள்ளார்.
இதற்காக அந்த ட்ரோன்களில் வெப்பநிலையைக் கண்டறியும் கருவி இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதிலுள்ள தொழில்நுட்பத்தின் மூலம் அதிக வெப்ப நிலை உள்ளவர்களை அடையாளம் காணமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரையில் இருந்து ஏறத்தாழ 20 மீட்டர் உயரத்தில் பறந்தபடியே இந்த ட்ரோன்கள் வெப்பநிலையைப் பதிவு செய்யும் என்றார் அவர்.
"குறிப்பிட்ட பகுதியில் கூடியுள்ள மக்களில் ஒருநபருக்கு அதிக வெப்பநிலை இருப்பதை கண்டறியும் பட்சத்தில் அந்த ட்ரோனில் இருந்து சிவப்பு ஒளி பாய்ச்சப்படும். இதையடுத்து அமலாக்க அதிகாரிகள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று குறிப்பிட்ட நபரை அடையாளம் காண்பார்கள்.
"கடந்த 3 தினங்களாக அமலாக்கக் குழுவின் உதவியோடு அந்த ட்ரோன்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன," என்றார் ரொஹைமி.
தற்போது 157 கண்காணிப்புக் குழுக்கள் வெவ்வேறு பகுதிகளில் பணியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் கண்காணிக்க இயலவில்லை என்றார்.
பொது இடங்களில் தொற்று அறிகுறிகள் உள்ள தனி நபர்களைக் கண்டறிய முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
கோல திரங்கானுவில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் முழு முடக்க நிலையின்போது காவல்துறைக்கு உதவும் பொருட்டு இவற்றை அளித்துள்ளனர் என்றார் ரொஹைமி.
திரங்கானுவைப் பொறுத்தவரை 96 விழுக்காட்டினர் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், காவல்துறை அமலாக்கம்தான் இதற்கு காரணம் என்றும் இது பெருமை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 10:58 pm
ஜோகூர் சோதனைச் சாவடியைக் கடக்க உதவும் QR குறியீடு
September 18, 2025, 10:19 pm
மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தாதீர்கள்; உணவகங்களில் புகைபிடிக்கும் தடையை கடைபிடியுங்கள்: பிரெஸ்மா
September 18, 2025, 10:17 pm
காணாமல் போன சபா மின்சாரத் துறை ஊழியர் கெனிங்காவில் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்
September 18, 2025, 10:16 pm
இளைஞர்களின் குரல்களைக் கேளுங்கள்: ஆசியான் தலைவர்களுக்கு பிரதமர் வலியுறுத்து
September 18, 2025, 10:15 pm
கம்போங் சுங்கை பாரு மறுமேம்பாடு: சிலாங்கூர் சுல்தானின் நிலைப்பாட்டை அன்வார், ஹம்சா ஆதரித்தனர்
September 18, 2025, 10:14 pm
கம்போங் சுங்கை பாரு பிரச்சினை; மலாய்க்காரர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
September 18, 2025, 2:45 pm
அமைச்சர் அறிக்கை வெளியிடுவதைத் தடுக்க சம்சுல் ஹரிசின் தாயாருக்கு இடைக்கால உத்தரவு
September 18, 2025, 2:43 pm
ஷாராவை பகடிவதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மாணவர் பள்ளி மாற்றப்பட்டனர்
September 18, 2025, 2:40 pm