செய்திகள் மலேசியா
156 வெளிநாட்டு குடியேறிகள் கைது: சைபர் ஜெயாவில் அதிரடி சோதனை
கோலாலம்பூர்:
சைபர் ஜெயாவில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனை
நடவடிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாத 156 வெளிநாட்டுக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை இரவு இமிகிரேஷன் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 202 வெளிநாட்டுக் குடியேறிகள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் Immigration director-general Khairul Dzaimee Daud கைருல் தெரிவித்துள்ளார். 12 பெண்களும் 2 குழந்தைகளும் இவர்களில் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் 4 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என்று குறிப்பிட்ட கைருல், 156 குடியேறிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் புத்ரா ஜெயாவுக்கு மேல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குடியேறிகள் தங்கியிருந்த இடத்தில் சட்டவிரோதமாக மின் இணைப்புக்கும் தண்ணீர் விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், சோதனை நடவடிக்கையில் காவல்துறை தேசிய காவல்துறை உள்ளிட்ட முகமைகளும் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
"இந்தச் சட்டவிரோத குடியிருப்பின் மூலம் கிருமித் தொற்று பரவ வாய்ப்புள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்காக வகுக்கப்பட்டுள்ள SOPகள் பின்பற்றப்படவில்லை," என்றார் கைருல்.
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:44 pm
மலேசிய சமூக ஒற்றுமை வலுப்பெறுகிறது: தேசிய ஒற்றுமை அமைச்சர் ஆரோன் கூறினார்
February 24, 2026, 2:42 pm
பெனம்பாங்கில் 1.28 மில்லியன் மதிப்பிலான போதைப் பொருள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டது
February 24, 2026, 12:45 pm
பாச்சோக் கடற்கரையில் 16 பேருக்கு ஜெல்லி மீன் தாக்குதல்: கிளாந்தான் மாநில மீன்வளத்துறை எச்சரித்துள்ளது
February 24, 2026, 12:11 pm
என்ட்ரி மிக்காயல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
February 24, 2026, 12:10 pm
ஹரிராயாவை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு நிதி உதவி
February 24, 2026, 12:07 pm
புக்கிட் செந்தோசாவில் கலவரம்: 6 ஆண்கள் கைது
February 24, 2026, 11:56 am
“மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை”: பிரதமர் அன்வார்
February 24, 2026, 10:55 am
47 குற்றச்சாட்டுகளில் முழு விடுதலை கோரி அஹ்மத் ஜாஹித் நீதிமன்றத்தில் ஆஜர்
February 24, 2026, 10:41 am
பள்ளி வளாகங்களில் வேக வரம்பு 50 கிலோமீட்டலிருந்து 30 கிலோமீட்டராக குறைக்க போக்குவரத்து அமைச்சு ஆய்வு
February 24, 2026, 10:38 am
