செய்திகள் மலேசியா
156 வெளிநாட்டு குடியேறிகள் கைது: சைபர் ஜெயாவில் அதிரடி சோதனை
கோலாலம்பூர்:
சைபர் ஜெயாவில் குடிநுழைவுத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனை
நடவடிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாத 156 வெளிநாட்டுக் குடியேறிகள் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத குடியிருப்பு ஒன்றில் திங்கட்கிழமை இரவு இமிகிரேஷன் அதிகாரிகள் இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்தியா, இந்தோனேசியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 202 வெளிநாட்டுக் குடியேறிகள் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் Immigration director-general Khairul Dzaimee Daud கைருல் தெரிவித்துள்ளார். 12 பெண்களும் 2 குழந்தைகளும் இவர்களில் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் அனைவரும் 4 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர் என்று குறிப்பிட்ட கைருல், 156 குடியேறிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் புத்ரா ஜெயாவுக்கு மேல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
குடியேறிகள் தங்கியிருந்த இடத்தில் சட்டவிரோதமாக மின் இணைப்புக்கும் தண்ணீர் விநியோகத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், சோதனை நடவடிக்கையில் காவல்துறை தேசிய காவல்துறை உள்ளிட்ட முகமைகளும் பங்கேற்றதாகத் தெரிவித்தார்.
"இந்தச் சட்டவிரோத குடியிருப்பின் மூலம் கிருமித் தொற்று பரவ வாய்ப்புள்ளது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்காக வகுக்கப்பட்டுள்ள SOPகள் பின்பற்றப்படவில்லை," என்றார் கைருல்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 2:52 pm
ஜொகூர் மாநில தேர்தலில் 70 விழுக்காடு வரை வாக்குப்பதிவாகலாம்: மலேசியத் தேர்தல் ஆணையம் தகவல்
July 10, 2026, 11:56 am
ஜொகூர் மாநில தேர்தலில் 15 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
July 10, 2026, 11:05 am
ஜொகூர் மாநில சட்டமன்ற தேர்தல்: அடுத்த மாநில அரசாங்கத்தை அமைக்க போவது யார் ?
July 10, 2026, 11:03 am
மலாக்காவில் படிவம் ஆறு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழப்பு
July 10, 2026, 10:58 am
ஜொகூர் பிரச்சாரத்தில் மசீசவுக்கு எதிராக டத்தோஸ்ரீ அன்வர் கிண்டலான கருத்துக்களைத் தெரிவித்தார்
July 9, 2026, 11:01 pm
