செய்திகள் மலேசியா
தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவான பாதிப்பு எண்ணிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,566 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.
வழக்கம்போல் சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம் மாநிலத்தில் 1,524 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
சரவாக்கில் 707, நெகிரி செம்பிலானில் 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில வாரங்களுக்குப் பிறகு நேற்றைய தினம் புது தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது.
நேற்று 5,271 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது. இதையடுத்து நாட்டில் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 627,652ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 4:40 pm
தியாகம், மனவுறுதி, அர்ப்பணிப்புடன் தேவையுள்ளோருக்கு உதவுவதே குர்பான்: பிரதமர் அன்வார்
May 26, 2026, 11:48 am
ஜாஹிட்டிடம் மன்னிப்புக் கேட்குமாறு ஜொகூர் அரண்மனை எனக்கு அறிவுறுத்தியது: ஓன் ஹபிஸ்
May 26, 2026, 10:29 am
கம்போங் ஜாவா லாடாங் பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி கட்டுமானத்தை விரைவுபடுத்த நடவடிக்கை: குணராஜ்
May 26, 2026, 10:15 am
