
செய்திகள் மலேசியா
தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவான பாதிப்பு எண்ணிக்கை
கோலாலம்பூர்:
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகி உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5,566 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று தெரிவித்தது.
வழக்கம்போல் சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம் மாநிலத்தில் 1,524 பேருக்குப் புதிதாக கிருமி தொற்றியுள்ளது.
சரவாக்கில் 707, நெகிரி செம்பிலானில் 505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில வாரங்களுக்குப் பிறகு நேற்றைய தினம் புது தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்துக்கும் கீழ் பதிவானது.
நேற்று 5,271 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியது. இதையடுத்து நாட்டில் ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 627,652ஆக அதிகரித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:44 pm
அவகாடோ பழம் சாப்பிடணும்னா கொஞ்சம் கூடுதல் பணம் கொடுங்க: பிரதமர்
June 15, 2025, 10:35 pm
பேரா மாநில நிலையில் நடைபெற்ற அறிவியல் விழா: ஈப்போ சென். பிலோமினா தமிழ்ப்பள்ளி வாகை சூடியது
June 15, 2025, 5:10 pm
கோவில் ஹராம் போன்ற விவகாரங்களை கண்காணிக்க ஒற்றுமை சட்டம் அவசியம்: டத்தோ லோகபாலா
June 15, 2025, 4:21 pm
சபா நம்பிக்கை கூட்டணி சபா ஜி.ஆர்.எஸ் கூட்டணியுடன் தேர்தல் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்
June 15, 2025, 4:11 pm
ஐ.ஜி.பியின் பணி காலம் ஜூன் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது: டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசைன் தகவல்
June 15, 2025, 10:45 am