செய்திகள் மலேசியா
ரயில் விபத்து: முழு அறிக்கை அமைச்சரவையில் நாளை தாக்கல்
புத்ராஜெயா:
இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை நாளை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிக்கை தற்போது போக்குவரத்து அமைச்சிடம் அளிக்கப்பட்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விபத்து தொடர்பான அறிக்கையானது இணையம் வழி நடைபெற்ற ஒரு சந்திப்பின்போது விசாரணை கமிட்டியால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவரங்களின் அடிப்படையில் எல்.ஆர்.டி. சேவை மேலும் மேம்படுத்தப்படும் என்றும், விசாரணைக் குழுவின் இடையறாத முயற்சிகளுக்குத் தாம் நன்றி தெரிவித்ததாகவும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக் கமிட்டி கண்டறிந்த விவரங்கள், செய்துள்ள பரிந்துரைகள் ஆகியவை ரயில்களை இயக்குவதற்கான SOPகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் உள்ள இடைவெளிகளைக் களைய உதவும்.
ஒன்பது பேர் கொண்ட கமிட்டி அளித்துள்ள அறிக்கையின் தாம் முழுமையாக ஆய்வு செய்யப் போவதாகக் குறிப்பிட்ட அவர், 14 நாட்களுக்குள் இந்த அறிக்கை தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மலேசியாவின் ஒட்டுமொத்த ரயில் சேவையின் கட்டமைப்பை மேம்படுத்த அறிக்கையில் உள்ள அம்சங்களும் விசாரணைக் குழுவினர் கண்டறிந்தவையும் உதவிகரமாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
கடந்த திங்கள்கிழமை மாலை இரண்டு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் பல பயணிகள் காயமடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
