செய்திகள் மலேசியா
முகக் கவசம் அணியாத தாஜுதீன் அப்துல் ரஹ்மானுக்கு 1500 ரிங்கிட் அபராதம்
கோலாலம்பூர்:
அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது முகக்கவசம் அணியாத காரணத்துக்காக 'பிரசாரனா மலேசியா'வின் முன்னாள் தலைவர் தாஜுதீன் அப்துல் ரஹ்மானுக்கு 1500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இரு எல்.ஆர்.டி. ரயில்கள் மோதிக் கொண்டது தொடர்பாக கடந்த மே 25ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தாஜுதீன் கலந்து கொண்டார்.
அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதில் அவர் 'பிரசாரனா மலேசியா' தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் முகக்கவசம் அணியாதது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் அவருக்கு 1500 மலேசிய ரிங்கிட் அபராதமாக விதிக்கப்பட்டதை டாங் வாங்கி காவல்துறை தலைவர் ஓர் அறிக்கையில் உறுதிசெய்துள்ளார்.
குறிப்பிட்ட அந்த செய்தியாளர் சந்திப்பின்போது முகக்கவசம் அணியாத நிலையில் ஃபேஸ் ஷீல்டு (face Shield) அணிந்திருந்தார் தாஜுதீன். இதையடுத்து அவரது இச் செயல் குறித்து பலரும் விமர்சித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
