செய்திகள் மலேசியா
துணைப் பிரதமர் பதவி விவகாரம்: பிரதமர் அலுவலகம் திட்டவட்ட மறுப்பு
புத்ராஜெயா:
துணைப் பிரதமர் பதவி தொடர்பாக வெளியான தகவலை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
பல்வேறு ஊடகங்களில் இது தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
துணைப் பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிப்பது குறித்து பிரதமர் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.
அதேபோல், பிரதமர் புற்றுநோய் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் மற்றொரு வதந்தி என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் அலுவலகம், பிரதமர் புற்று நோயில் இருந்து முழுவதும் மீண்டுவிட்டதாக கூறியுள்ளது.
புற்றுநோய் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பிரதமர் அந் நோயில் இருந்து விடுபட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர் என்றும் அந் நிபுணர்கள் பிரதமருக்கு சிகிச்சை அளித்தவர்கள் என்றும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் அடுத்த துணைப் பிரதமராக தாம் நியமிக்கப்பட இருப்பதாக வெளியான தகவலை வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் துன் ஹுசைன் மறுத்துள்ளார்.
இது வெறும் வதந்தி என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், இது தமக்கு எதிரான சதியாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 6:23 pm
குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் மூடப்படாது; இடம் மாற்றம் செய்யப்படும்: வோங்
December 12, 2025, 3:29 pm
மாற்றுத்திறனாளி, ஏழ்மையான குடும்பத்திற்கு பேராக் ஐ பி எப் உதவிக்கரம்
December 12, 2025, 11:29 am
அரைகுறை ஆடையுடன் வந்த பெண்ணை மலாக்கா காவல் நிலையத்திற்குள் செல்ல அனுமதி மறுப்பு: சர்ச்சையாகும் சம்பவம்
December 12, 2025, 10:46 am
மேரிடைம் நெட்வோர் நிறுவனத்திற்கு எம்டிடி வழிகாட்டுதல்களை வழங்க ஆர்எச்பி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவு
December 12, 2025, 10:39 am
ரோஸ்மாவின் விடுதலை மேல்முறையீட்டை வாபஸ் பெற்றது மற்ற சட்ட நடவடிக்கைகளைப் பாதிக்காது: ஏஜிசி
December 12, 2025, 10:07 am
மியன்மாரில் வேலை மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட 20 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
December 12, 2025, 9:52 am
ஒருங்கிணைந்த தேர்வுச் சான்றிதழ் விவகாரம் அரசாங்கத்தை கட்டாயப்படுத்த வேண்டாம்: முஹம்மது ஹசான்
December 11, 2025, 9:54 pm
தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரிய தலைவர் பாரதி: டத்தோஸ்ரீ சரவணன்
December 11, 2025, 8:56 pm
